பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்



இந்தச்சமாதான உடன்படிக்கை நெடுநாள் அமுலில் இல்லாமற் போயிற்று. குடியரசுப் படையைச் சேர்ந்த சில அதிகாரிகள் அதைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர். அதற்குக் காரணமாயிருந்த தான்பிரீனும் பலமாய்க் கண்டிக்கப்பட்டான். அரசியல் தலைவர்களுக்குள்ளும் ராணுவத் தலைவர்களுக்குள்ளும் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வழியில்லாது போயிற்று. ஆயினும் இருகட்சித்தலைவர்களிலும் முக்கியஸ்தராய் விளங்கிய டிவலராவும் மைக்கேல் காலின்ஸும் புதிதாய் நடக்கவேண்டியிருந்த பொதுத் தேர்தலில் இரு கட்சிகளையும் ஒன்று சேர்த்து ஒரே ஸின்பீன்கட்சியின் சார்பாகப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டுமென்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், அந்த ஒப்பந்தமும் சிதைந்து போயிற்று. கிழக்குத் திப்பெரரி அங்கத்தினர் ஸ்தானம் காலியாயிருந்ததால், அதற்கு எந்தக்கட்சி அங்கத்தினரை அபேட்சகராக நியமிக்கலாம் என்பதைப் பற்றிப் பலத்த விவாதம் ஏற்பட்டதால் இப்படி நேர்ந்தது.

மேலும் விவசாயிகளும் தொழிலாளர்களும் குடியரசுக் கட்சியையும் பிரீஸ் டேட் கட்சியையும் எதிர்த்துத் தங்களுடைய பிரதிநிதிகளைச் சுயேச்சையாக நறுத்த முற்பட்டனர்.

உள்நாட்டுக் கலகம் ஏற்படாமல் தடுப்பதற்குத் தான்பிரீன் தன்னால் இயன்றளவு முயற்சிசெய்து பார்த்தான். அவன் முயற்சிகள் பயனற்றுப்போயின. சகோதரர்களுக்குள்ளேயே பூசல் விளைந்தது. ஒருவரையொருவர் சுட்டுத்தள்ள முற்பட்டனர். கொடிய கலகம் மூண்டுவிட்டதால், தான்பிரீன் குடியரசுப் படையுடன் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமற் போயிற்று. டின்னி லேவலி, லியாம் லிஞ்ச் முதலிய பல வீரர்களை இழக்க நேர்ந்ததைக் குறித்துத் தான்பிரீன் வருந்தினான்.

1923ஆம் ஆண்டு லியாம் லிஞ்சின் மரணத்திற்குப் பின்னால் நைர் பள்ளத்தாக்கில் நடக்கக்கூடிய ஒரு சமாதானக் கூட்டத்திற்குத் தான்பிரீன் சென்றான். இடைவழியில் பிரீ ஸ்டேட் பட்டாளத்தார் அவனையும் அவனுடன் சென்ற நண்பர்களையும் பார்த்து சுட ஆரம்பித்தனர். அப்பொழுது அவர்கள் பல திசைகளைப் பார்த்து ஒடிமறைந்துகொள்ள நேர்ந்தது. தான்பிரீன் இரண்டு நாள் காட்டுப்புறத்தில் சுற்றித்திரிந்து, பின்னால் பூமிக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு பாசறைக்குள் பதுங்கியிருந்தான். களைப்பு மிகுதியால் அவன்.அங்கே விழுந்து உறங்கிவிட்டான். சிறிது நேரத்தில் பிரீஸ்டேட் பட்டாளத்தார் அங்கு சென்று, அவனைத் திடீரென்று சூழ்ந்து கொண்டு கைது செய்தனர். அவன் விழித்துப் பார்க்கையில் நாலு புறத்திலும் பட்டாளத்தார் துப்பாக்கிகளைத் தன்னை நோக்கிப் பிடித்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். ஐந்து வருஷகாலம் வல்லமை மிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, எந்த நேரத்திலும் பகைவர்களுடைய கையில் சிக்காமல் சாமர்த்தியத்துடன் தப்பிவந்த தான்பிரீன், தன் தாட்டுச் சகோதரர்களுடைய கையில் எளிதாக அகப்பட்டு விட்டான் அவன்

143