பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4
தேர்தல் வெற்றி


1918ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அயர்லாந்தில் பொதுத்தேர்தல் நடந்தது. அதில் ஸின்பீன் இயக்கத்திற்கும் ஐரிஷ் தொண்டர்படைக்கும் மகத்தான வெற்றி ஏற்பட்டது. மேலும் தேர்தலின் மூலம் அயர்லாந்தின் உள்ளக் கருத்து உலகத்திற்குத் தெளிவாக அறிவிக்கப்ட்டது.

அயர்லாந்துக்கென்று தனியான சட்ட சபையோ, பார்லிமென்டோ கினையாது. பிரிட்டிஷ் பார்லிமென்டுதான் அதற்கும் சட்டசபை பார்லிமென்டில் அயர்லாந்துக்கு 103 ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்ட்டிருந்தன. பார்லிமென்டுக்குப் பிரதிநிதிகள் தேர்தெடுக்கப் பொதுத் தேர்தல் நடக்கும் பொழுது, அயர்லாந்திலும் அத்தேர்தல் நடைபெறும். அதில் இடம் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட ஐரிஷ் பிரதிநிதிகள் தங்கள் தாய்நாட்டுக்காக விசேஷ நன்மை செய்ய முடியும் என்று சிலர் எண்ணியிருக்கலாம். இது தவறான எண்ணம். ஏனெனில் பார்லிமென்டிலுள்ள 700 அங்கத்தினரில் ஐரிஷ் பிரதிநிதிகள் ஏழில் ஒரு பாகத்தினரே. "இராவணனுக்குப் பத்துத் தலை, இங்கிலாந்தின் பார்லிமென்டுக்கு எழுநூறு தலை!“ என்று ஐரிஷ் மேதையான அன்னி பெஸன்ட் அம்மையார் கூறுவது வழக்கம். இந்த 700 தலைகள் அயர்லாந்துக்கு விரோதமாக நிற்கும் பொழுது, ஐரிஷ் பிரதிநிதிகள் என்ன செய்ய முடியும்? அவர்கள் கெஞ்சிப் பார்த்தார்கள். பரஸ்பர ஒத்துழையாமையைக் கையாண்டு பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை.

52