பக்கம்:தாயுமானவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“赏 அன்பினால் டாக்டர் சுப்பு ரெட்டியார் ஆக்கி யுள்ள தம்பிசான் தோழர்' என்னும் தகவுசால் நூலைப் பார்த்தேன். 10. திருமகள் கேள்வன் தாளைத் திருமணத் தேந்தி, நாளும் அருந்தமிழ் மகிழ, நூல்கள் ஆக்குமோர் கடமை செய்து வருபவர், நண்பர் டாக்டர் வன்றொண்டர் தம்மேல் செய்த பொருவிலாத் தோழர் நூலின் பொற்புணர்ந்துவகை கொண்டேன். 11. ஆண்டவன் அருளைக் காட்டும் ஆயிரம் ஆடல் தம்முள் ஆண்டவன் தோழர் ஆரூர் அடியவர் பொருட்டுச் செய்த நீண்டதோர் ஆடல் காட்டும் நீதியை உலகம் காண வேண்டுமென் றாய்ந்து தந்த விளக்கினை விளங்கிக் கொண்டேன், 12. தூய்மையே உருவ மான சுந்தரர் பரவை யோடும் வாய்மையே உருவ மான சங்கிலி வனிதை யோடும் தோய்ந்நல் இன்ப-வாழ்வும் தொடர்ந்தவர் துன்ப வாழ்வும் ஆய்ந்துள ரெட்டி யாரின் ஆற்றலும் அறிவும் கண்டேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/13&oldid=892120" இலிருந்து மீள்விக்கப்பட்டது