பக்கம்:தாயுமானவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii நலத்துடனும் மனவளத்துடனும் நான் வாழ்வேன் என்ற மனவுறுதி என்பால் உண்டு. இதற்குத் திருவருள் துணை இருக்கும் என்ற திடமான நம்பிக்கையும் கொண்டுள்ளேன். இத்தகைய சமய இலக்கியப் பணியில் ஈடுபாடும் அதனை நிறைவேற்றும் மனஉறுதியும் தந்து உதவும் பரம்பொருளை வாழ்த்தி வணங்கி அமைகின்றேன். அருளாளே எவையும் பார்என்றான் - அத்தை அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்டது அல்லால் - கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழா என்னையும் தன்னையும் வேறா - உள்ளத்து எண்ணற்ற வண்ணம் இரண்டுஅற நிற்கச் சொன்னது மோஒரு சொல்லே - அந்தச் சொல்லால் விளைந்த சுகத்தை என்சொல்வேன் - தாயுமானவள் வேங்கடம்' AD-13 அண்ணாநகர் சென்னை - 600 040 ந. சுப்பு ரெட்டியார் விசயதசமி 26, 11.2001 7. ஆனந்தக் களிப்பு - 13,14, தாயு-2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/18&oldid=892175" இலிருந்து மீள்விக்கப்பட்டது