பக்கம்:தாயுமானவர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் வினையின் பங்கு 令 177,哆 நடுவனாய் நின்று அவ்வவ்வினைக்குரிய பயனை உரிய காலத்தில் உரிய இடத்தில் உரிய உடம்பில் கூட்டுவிப்பான். இதற்குக் காரணம் இறைவன் அவ்வினையைச் செய்யும் ஆருயிர்கள்மீதுள்ள அளவற்றக் கருணையேயாகும். இதனைச் சித்தாந்த முறையில் விளக்கம் பெறவேண்டும். இறைவன் உயிர்கட்கு வினைப் பயனை ஊட்டுவித்ததற்குக் காரணம் அவற்றைப் பிணித்துள்ள ஆணவ மலத்தைப் போக் குதல் வேண்டும் என்னும் திருவுள்ளக் கருத்தேயாகும். உயிர் கள் எல்லாவற்றிற்கும் இறைவனே முதல்வன்' என்பதை மறந்து எல்லாவற்றிற்கும் தாங்களே முதல்வர் என்று எண்ணும் செருக்கினால் செய்யப்பெறும் செயல்களே வினை எனப்ப டும். இம்மறதியும் செருக்கும் ஆணவமல மறைப்பினால் வருவன. வினையை உயிர்கள் தவறாது அநுபவிக்க அநுப விக்க அவை தமது அறியாமை நீங்கி இறைவனை அறியும் அறிவைப் பெறும். இறைவன் வினைப்பயனை ஊட்டுவித் தல் மருத்துவர் நோயாளிக்கு மருந்து கொடுத்தல் போன்றது. ஆணவ மலம் உயிர்கட்கு உள்ள நோய் ஆகும். அதற்கு மருந்தாய் உள்ளவை வினைப் பயன்கள். மருந்துகளில் சில இனிக்கும்; சில கசக்கும். நல்வினைப் பயனான இன்பம் இனிப்பான மருந்தை உண்பதைப் போன்றது; தீவினைப் பயனாகிய துன்பம் கசப்பான மருந்தை உண்பது போன்றது. இன்னும் சிலவேளைகளில் அறுத்தும் கீறியும் சுட்டும் செய் யும் சிகிச்சைகளும் நிகழும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன அல்லவா? இங்ங்னமே மிகப் பெரிய துன்பங்களையும் மிகப் பெரிய பயனாக இறைவன் ஊட்டுவிப்பான். ஆருயிர்கள் இவற்றைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். இது கருதியே வள்ளுவர் பெருமானும் 'இடுக்கண் வருங்கால் நகுக: (குறள் 521) என்று கூறிப் போந்தார் என்பதையும் நினைக்கத் தோன்றுகிறதல்லவா? சுருங்கக் கூறின், ஆருயிர்களின்மீது எல்லையற்ற கருணையையுடைய இறைவன் ஆணவத்தின் ஆற்றல் கெடுதற்பொருட்டே வினையின் பயனை ஊட்டு விக்கின்றான் என்பதை உணர்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/197&oldid=892194" இலிருந்து மீள்விக்கப்பட்டது