பக்கம்:தாயுமானவர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆 60 令 தாயுமானவர் 'ஆதியும் அந்தமும் ஆனந்த மயம்ஆம் சோதியே சத்தே தொலைவு இலா முதலே' - அகவல் 5,6 'ஆதி அநாதியும் ஆகி எனக்கு ஆனந்த மாய்அறி வாய்நின்று இலங்கும்" - ஆனந்தக்களிப்பு - 1 என்பவற்றில் இதனைக் காணலாம். (10) அவனன்றி ஓர் அணுவும் அசையாது. எல்லாப் பொருளும் இறைவன் இயக்கவே இயங்கும் என்ற கருத்தை அடிகள் மிகுதியும் வற்புறுத்துவர். 'ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய!ஒரு செயலும் இல்லை பாசாதி தனில்உள்ள செயல்எலாம் முடிவிலே பார்க்கில்நின் செயல்அல்லவோ?” - பரிபூரணா 3 'சந்ததமும் எனது செயல் நினது செயல், யான் எனும் தன்மைநினை அன்றிலாத் தன்மையால் வேறு.அலேன்:” - மேலது 5 'எல்லாம்உன் அடிமையே; எல்லாம்உன் உடைமையே எல்லாம்உன் னுடையசெயலே' -- கருணாகரக - 3 'அவனன்றி ஓர்அணுவும் அசையாது" - எங்கும திறைகின்ற - 1 'சிவன்செய லாலே யாதும் வரும்எனத் தேரேன் - சிவன் செயல் - 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/80&oldid=892370" இலிருந்து மீள்விக்கப்பட்டது