பக்கம்:தாய்லாந்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 மரத்தின் மீது பெரிய குரங்கு ஒன்று ஜம்மென்று காய்களைத் திருகித் திருகிக் கீழே போட்டுக் கொண்டிருந்தது.

தேங்காய்களைப் பறித்துப் போடுவதற்கென்றே இங்கே குரங்குகளைப் பழக்கியிருக்கிறார்கள். எஜமான் உத்தரவு கிடைத்ததும் இவை மரத்தின் மீது வேகமாக ஏறிப் போய் தேங்காய்களைப் பறித்துப் போட்டபடி மரத்திற்கு மரம் தாவும். ஆட்கள் கூடவே போய் தேங்காய்களைச் சேகரித்துக் கொள்வார்கள். சில ஆட்கள் காய்களைப் பொறுக்கிக் கொண்டுபோய் பெட்டி வண்டியில் போட்டுக் கொண்டிருந்தனர்.

இங்கே நம் ஊரில் குரங்காட்டிகள் குரங்குக்குக் குங்குமம் பூசி, சட்டை போட்டு “ஆடு ராமா, ஆடு ராமா” என்று ஆட்டி வைத்துப் பணம் பண்ணுகிற மாதிரி, அங்கே “ஏறு ராமா... மரம் ஏறு ராமா” என்று மரம் ஏறித் தேங்காய் பறிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்!

பொழுது சாயும் நேரம். ஓரிடத்தில் நைட் பஜார் ஒன்று அன்றைய பரபரப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த நைட் பஜாரில் பழங்குடி மக்களின் கடைகள் நிறைய இருந்தன. சின்னச் சின்னதாய்ப் பலவகை பொருட்கள். மரத்தில் சின்னச் சின்ன யானைகள் செய்து விற்பார்கள் என்றும், விலை கேட்டால் அசல் யானை விலை சொல்வார்கள் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். பேரம் பேசி வாங்கவேண்டும் என்றார் சொம்பட் பேரம் பேச நேரம் இல்லாததால் ஓரமாகக் கடைகளைப் பார்த்துக் கொண்டே வேகமாக வந்து விட்டோம்.

மீண்டும் பணிப்பெண் உபசாரம், அட்டைப் பெட்டியில் உணவு, வாசனை டவல்...

நீண்ட நெடுந்துரப் பயணத்துக்குப் பின் விடியற்காலை பாங்காக் போய்ச் சேர்ந்தோம். அலுப்பு, களைப்பு எதுவுமே தெரியவில்லை. தலைக் கிராப்புக் கூடக் கலையவில்லை.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வரவேற்பறையில் எங்களுக்கு ஒரு செய்தி காத்திருந்தது.

“இன்று காலை பதினொரு மணிக்கு திரு மறைக்காடன் அவர்கள் தங்களைச் சந்திக்க வருகிறார்.”

மறைக்காடன் அவர்களைப் பற்றி பாங்காக்கில் தெரியாத

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/68&oldid=1075258" இலிருந்து மீள்விக்கப்பட்டது