பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

159


ஹஹோல் சிரித்துக்கொண்டே துள்ளியெழுந்தான்; பரபரவென்று நடக்க ஆரம்பித்தான்.

“ஏ, பார வண்டி!” நானுங்கூடத்தான் அதை நம்பவில்லையடா’ என்றான் ஹஹோல்.

“என்னை ஏன் பார வண்டி என்று சொன்னாய்?” என்று உயிரற்ற சிரிப்போடு ஹஹோலைப் பார்த்துக் கேட்டாள் நிகலாய்.

“ஏனா? நீ அப்படித்தானே இருக்கிறாய்?”

திடீரென்று நிகலாயும் வாய்விட்டு உரக்கச் சிரித்தான், சிரிக்கும்போது அவன் வாய் விரிந்து திறந்திருந்தது.

‘என்னப்பா இது.. என்ன சிரிப்பு?’ என்று நிகலாயின் முன்னால் சென்று நின்று வியப்புடன் கேட்டான் ஹஹோல். ‘இல்லை. திடீரென்று ஒன்றை நினைத்துக்கொண்டேன் சிரிப்பு வந்தது. உன் மனத்தைப் புண்படுத்த எண்ணுபவன் உண்மையிலேயே முட்டாளாய் தானிருக்கவேண்டும்’ என்றான் நிகலாய்.

“என் உணர்ச்சினைய எப்படிப் புண்படுத்த முடியும்?” என்று தோளை உலுப்பிக்கொண்டே கேட்டான் ஹஹோல். “அது எனக்குத் தெரியாது’ என்று அன்பு கலந்த இனிய புன்னகையோடு சொன்னான் நிகலாய். ‘உன்னை ஒருவன் புண்படுத்திவிட்டால், பின்னால் அவன்தான் அதையெண்ணி வெட்கப்பட்டுக் கொள்ளவேண்டும். அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.’

“வழிக்கு வந்துவிட்டாயா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ஹஹோல்.

“அந்திரியூஷா?’ என்று சமையலறையிலிருந்து அழைத்தாள் தாய்.

அந்திரேய் போய்விட்டான்:

தன்னந்தனியாக விடப்பட்ட நிகலாய் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு முரட்டுப் பூட்சுக்குள் புதைந்திருந்த தன் காலை எடுத்து நீட்டினான்; காலைப் பார்த்தான்; தடித்து போன காலின் கெண்டைக்காலை தடவி விட்டுக்கொண்டான்; கையை உயர்த்தி தனது கொழுத்த உள்ளங்கையையும் உருண்டு திரண்டு, கணுக்களில் மஞ்சளாய்ப் பூ மயிர் வளர்ந்திருந்த தன் குட்டையான கைவிரல்களையும் பார்த்துக் கொண்டான். ஏதோ ஒரு கசப்புணர்ச்சியோடு கையை உதறிவிட்டு அவன் எழுந்தான்;

அந்திரேய் தேநீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்த சமயத்தில் நிகலாய் கண்ணாடியின் முன் நின்ற தன்னுருவைப் பார்த்துக் கொண்டிருநதான்.