தாய்
257
“எனக்குத் தெரியாது. எசமான்! நான் ஒன்றுமே தெரியாதவள். ஏதோ வியாபாரம் செய்து பிழைக்கிறேன். எதைப்பற்றியும் தெரியாத முட்டாள் ஜென்மம் நான்?”
“நாவை அடக்கு!” என்று மீசையைத் திருகிக்கொண்டே உத்தரவிட்டான் அந்த அதிகாரி. மீண்டும் அவள் தலை வணங்கினாள். ஆனால் குனிந்து வணங்கும்போது அவள் தன் மூக்கை மட்டும் அவனுக்கு நேராக நிமிர்த்திக் காட்டி, “இவனுக்கு வேணும்!” என்று அவள் தாயிடம் மெதுவாகச் சொன்னாள்.
பிறகு பெலகேயாவைச் சோதனை போடும்படி அவன் அவளுக்கு உத்தரவிட்டான். அந்த உத்தரவைக் கேட்டு அவள் விழித்தாள்; அதிகாரியை வெறித்துப் பார்த்தாள். பிறகு பயந்து போன குரலில் சொன்னாள்;
“ஐயோ! எனக்கு இந்த விவகாரமெல்லாம் எப்படியென்று தெரியாதே, எசமான்!”
அவன் தரையை ஓங்கி மிதித்துக் கொண்டு அவளை நோக்கிச் சத்தமிட்டான். மரியா, தன் கண்களைத் தாழ்த்தினான்: தாயிடம் மெதுவாகக் கூறினாள்;
“சரி அம்மா. நீ உன் பொத்தான்களைக் கழற்று. பெலகேயா நீலவ்னா”
தாயின் ஆடையணிகளைத் தடவிச் சோதனை போட்ட போது, குருதியேறிச் சிவந்த அவளது முகத்தில் அவமான உணர்ச்சி பிரதிபலித்தது.
“பூநாய்ப்பிறவிகள்” என்று அவள் முணுமுணுத்துக் கொண்டான்.
“நீ என்ன சொல்லுகிறாய்?” என்று அந்த அதிகாரி சோதனை நடந்த இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டாள்.
“இந்தப் பெண் பிள்ளைகள் விஷயம், எசமான்!” என்று யந்த குரலில் முனகினாள் மரியா.
கடைசியாக அந்த அதிகாரி தான் காட்டிய தஸ்தாவேஜூகளில் தாயைக் கையெழுத்திடச் சொன்னான். அவளது அனுபவமற்ற கை பெரிய பெரிய மொத்தை எழுத்துக்களில் கையெழுத்திட்டது.
“பெலகேயா விலாசவா. ஒரு தொழிலாளியின் விதவை மனைவி.”
“நீ என்ன எழுதித் தொலைத்திருக்கிறாய்? இதை ஏன் எழுதினாய்?” என்று அந்த அதிகாரி பல்லை இளித்துக் கொண்டு கத்தினான். பிறகு சிறு சிரிப்புடன் சொன்னான்: