பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iii


பதிப்புரை

உலக இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் முன்னிற்பவர் மக்சீம் கார்க்கி, மக்சீம் கார்க்கியின் படைப்புகளில் முதன்மையானது - தலையாயது “தாய்”.

ரஷ்ய மன்னர் ஜார் ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து 1905 ஆம் ஆண்டில் வெடித்தெழுந்த புரட்சி அடக்கி ஒடுக்கப்பட்டது. இப்புரட்சியின் உண்மையைப்பற்றி விளக்கிச்சொல்ல, ரஷ்யத்தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு நிதி திரட்ட, அமெரிக்க அரசு ஜார் மன்னனுக்கு ஆதரவு தராமலிருக்க உறுதிசெய்ய போல்ஷிவிக் கட்சி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பிற்று. இதற்கு ஓராண்டுக்கு முன், 1904 ஆம் ஆண்டில், கார்க்கியின் எண்ணத்தில் “தாய்” உருப்பெற்றது. அவருடைய வாழ்க்கைத்துணைவியாகிய ஏகடரினா பவ்லோவ்னா வோல்ழினா நல்ல இலக்கியவாதி. “சம்ரஸ்கயா கெசட்டா” என்னும் இதழின் அச்சுப்பிழை திருத்துபவராகத் திருமணத்திற்கு முன் பணிசெய்தவர். கருத்தில் உருப்பெற்ற “தாய்” புதினத்தைக் குடும்பத்தினருக்கு விளக்கிச் சொன்னார்.

அமெரிக்காவில் கார்க்கி இலக்கிய வரலாற்று மேதை எச். ஜி. வெல்ஸ், ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு, மெய்யியல் வல்லுநர் வில்லியம் ஜேம்ஸ் ஆகியோருடைய நட்பைப் பெற்றார். அன்றைய அமெரிக்கா, பிரிட்டிஷ் மேலாட்சியை எதிர்த்துக் காலனி அமைப்பு முறையிலிருந்து விடுபட்ட பின்னர், அடிமை முறையை எதிர்த்து வெற்றிகண்ட பின்னணியில், மக்கள் முற்போக்கு விடுதலை இயக்கங்களையும் போராட்டங்களையும் ஆதரித்தனர். பணி முடித்து கார்க்கி நாடு திரும்பினார். ஓய்வெடுக்க மனைவியுடன் கேப்ரி (இத்தாலி) சென்றார்.

1906 ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் “ஆப்பிள்டன்” இதழில் தாய் மூதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுதும் வெளிவந்தன. கார்க்கியின் “தாய்” முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். ரஷ்ய முற்போக்காளர்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர். லெனின் உறங்கிக்கிடக்கும் கோடானுகோடி உழைப்பாளிகளைத் தட்டி எழுப்பி