த கோவேந்தன்
變 99
விட்டுக்கொடுக்கிறது நீரில் உள்ள கடினத்தையும் கல்லின் மென்மையையும் கண்டுபிடி
நீருக்குக் கடினமாகத் தோன்றும் கல் போல அல்லது கல்லுக்கு மென்மையான நீர் போலப் பாசாங்கு செய்துகொண்டு நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்
சொற்களுக்கு அப்பால் நாம் உள்ளோம் நாம் நீரோ கல்லோ இல்லை. மென்மை அல்லது கடினம் இல்லை, ஆனால் ‘இயற்கை நெறி’ தான் இது ஒவ்வோர் உருவம் பெற்று அதையே கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது
121. எண்ணமின்றி இரு
'நான் முதலில் இங்குத் தான் பாய்வேன், பின்னால் அங்கே வழிந்தோடுவேன்’ என நீர் கருதுவதில்லை நீரோட்டம் தானே ஏற்படுகிறது
ஓசையிடும் நீர் அருவிகளிலும், அமைதியான குளங்களிலும் நீர் எதையும் கருதுவதில்லை தானே நகரும் போது, அதை நகர்த்துவதில் எந்தப் பரபரபிற்கும் பயனில்லை
இது தான் கமுக்கம் நீரைப் போல மென்மை யாயிரு. உள்ளே இருக்கும் உந்துதலை நம்பு. ஒவ்வொரு வினாடியையும் அதன் படிவிட்டு விடு பின் தவறில்லாத வழியே நகர் எவ்வித நோக்கமின்றி இரு