இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த கோவேந்தன்
變 115
138. ஆழ்ந்த நெறியில்
ஒருவர் மற்றவரை எப்படி அறிய முடியும்? மற்றவருக்கு ஒருவர் வெளிப்படையாகக் காண்பிக்கும் போது ஆழ்ந்த தெரியாததில் அறிவு திறக்கிறது.
இழப்பு என்பதுதான் கண்டுபிடிக்கப்படுகிறது இழப்பைத் தொடர்வதுதான் ‘இயற்கை நெறி'.
139. கண்டுகொள்ளும் நேரம்
முன்னதாக அறிந்திலாத பழைய நண்பனை கண்டுறுவது போல, கண்டு கொள்ளும் நேரம் எப்போதும் வியப்புக்குரியது.
140. இன்னோர் அறிவைக் காணுதல்
எண்ணம் தசைக்கு விட்டுக் கொடுக்க, ஏதோ ஒரு உந்துதலால் ஏற்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. மனம் இன்னுமோர் அறிவைக் காண்கிறது.
உடல் எண்ணாதவரை நினைவுகள் தசையின் தேவையை எண்ணாது. இழக்கும் மனமும் காணும் உடலும் ஆழ்ந்த சமநிலைக்குத் தொடக்கம்.
கமுக்கத்தை உணரும் மனமும் எண்ணும் உடலும் இல்லாதவரை, கமுக்கமான இடங்களின் மண்ணுலக ஆசையை உகந்ததாக்காது.