பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


நிறைவு செய்தல், வெறுமையாக்குதல் என்கிற தொடரில் இவ் இரண்டிற்குமிடையேயுள்ள நிலையே நிலைத்து நிற்கிறது என்கிற உண்மையை அறிவால் உணர்கிறான். எனவே அடக்கத்துடன் அவன் தன் பயணத்தைத் தொடருகிறான். “சரி, சரி” என்று போகிற பாங்கை வளர்த்துக் கொள்கிறவன் “இயற்கை நெறியை பின்பற்றுபவனாவான்” இயற்கையின் அறிவுரையைப் பின்பற்றுபவன் தன்னை அலட்டிக் கொள்ளாமல் ‘சரி, சரி’ என்று தன் பயணத்தைத் தொடருகிறான்.

174. காதலரின் சமநிலை

திறமையோ, ஆற்றலோ தேவை இல்லை. வெளிப்படுத்துதல், நம்பிக்கை மட்டும் தான். குழந்தை காதலனாகத் திரும்புகிறது; வெகுளியாக, அணியமாக அச்சத்துடன் ஆவலுடன்.

எல்லாமே வெளிப்படுத்தப்பட்டு, விடுவிக்கப்படும் போது, வெற்றிடம் நிரம்பக், காதலர்கள் சமநிலையில் உள்ளனர்.

'இயற்கைநெறியைத் தாங்க முடியாது. தாங்கு பவருமில்லை

175. உயர்வினும் உயர்வு

கொடுப்பதால் ஆண் பெண்ணை நிரப்பி,