பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



174 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


வதாலும் இருவருக்குமே இழப்பு என்பதைத் தவிர கண்ட பலன் என்ன? வெறுமைதான் எச்சம்.

அண்மையில் இந்த முடிவுக்கு வருவது சரிதானா? ஆணையும் பெண்ணையும் தவிர இந்தப் புதிரை யார் விடுவிக்க முடியும்?

210. திகைப்பூட்டும் நிலை

கலவியில் திளைத்திருக்கும் காதலர்களில், அவன் தன்னைக் கடந்து செல்கிறான்; தன்னையே மறந்து விடுகிறான். அதேபோல் பெண்ணும் தன்னைக் கடந்து சென்று விடுகிறாள். தன்னை மறந்து விடுகிறாள்.

உருவம் என்கிற நிலையை அவள் கடந்துவிடும் போது அவள் அவனுக்கு ஒரு பொருளேயில்லை. அதேபோல் உருவம் என்கிற நிலையை அவன் கடந்து விடும் போது, அவன் அவளுக்கு ஒரு பொருளேயில்லை. ஒருவருக்கு மற்றவர் தெரிந்தவர் என்கிற நிலையே அழிந்து போகிறது.

ஆசை வைத்துக் கொள்ளாததினாலேயே அவர்கள் ஆசையுடையவர்களாகிறார்கள். ஒருவருடன் மற்றவர் பிணைந்திருக்கும் போது திகைப் பூட்டும் ஒரு நிலையே நம் கண்களுக்குத் தென்படுகிறது.