பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



32 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


36. உலகன்னையின் அருகில்

இனிமை பொருண்மையானதில்லை பொருண்மையும் இனிமை இல்லை. உடலோம்பல் மண் மணத்தைத் தாங்கியுள்ளது.

பேரன்னையின் ஆற்றலின் அருகிலே இரு நாம் வேறு எங்கே திரும்பிச் செல்கிறோம்? நாம் அவளது தானியங்களைாகவும், இனிய பழங்களுமாகவும் இருக்கிறோம் அவள் மண்ணில் வேறுன்றித்தான் நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு வளர்கிறோம் அவளிடமிருந்துதான் நாம் செழுமையுற்று அவளது மெய்யறிவு என்பதால் அறுவடை ஆகிறோம்

ஆணும் பெண்ணும் வாழும் நிலம் அவளது ஆற்றலால் நாம் ஒருவருக்கொருவர் காண்கிறோம் அவளைத் தொடுகிறோம். அவளது அமிழ்தத்தைப் பருகுகிறோம் அவளது எளிய செல்வக் குவியலால் சீரும் சிறப்பும் பெறுகிறோம்.

37. சரிசமமான முழுமை

ஆண் மட்டும் அல்லது பெண் மட்டும் என்பதில்லை ஒருவரின் இயற்கை மற்றவரின் தேவையை உருவாக்குகிறது