பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



46 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


அணுக்கும் பெண்ணுக்கும் இடையே 'இயற்கை நெறி உள்ள போது, அதிகாலைச் செங்கதிர் தானே உதிப்பது போல இருக்கும்.

58. அமைதியாகச் சிரி

ஆணும் பெண்ணும் அமைதியான உள் புறத்தில் இருந்தவாறே ஒருவரை ஒருவர் தேடுவது என்பது எவ்வளவு மடமை! இதை எப்படி இடர்ப்பாடானதாகக் கொள்ள முடியும்? பார்வைகளும் குறுகுறுப் பேச்சுகளும், கேட்பதும், விரைவுறுதலும் தன்னைத் தனக்காக வணிகம் செய்வதே

இருவரும் ஒருவரில் மற்றவரைத் தெளிவாகக் காணும்போது பெரும் உதவிதான். அப்போது தேடுவது முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது

அமைதியான இடம், மற்றும் இறுதிப்படுக்கையிலிருந்து அமைதியாகச் சிரிப்பதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்? இப்படி இடுக்கண்ணானது மடமையிலும், மடமை இடர்ப்பாட்டில் முடிகிறது.

59. தலைமை ஆற்றல் அடக்கப்படுகிறது

ஒவ்வொரு மாந்தனுள்ளும் எல்லா மாந்தர்களும், ஒவ்வொரு பெண்ணின் உள்ளேயும் எல்லாப் பெண்களும் உள்ளனர் ஓர் ஆண் தன்னைத் தானே