பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



54 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


சொல்லப்படாத சொல், எண்ணப்படாத எண்ணம் இயற்கை, ஒன்றும் இல்லாத நிலையைப் போன்றது சொற்களால் இயற்கை நெறி இருப்பதாக எண்ணுகிறோம் ஆனால் அது சொல்லும் அன்று. எண்ணமும் அன்று

66. சொற்கள் இல்லாமல்

ஒன்றை மற்றதிலிருந்து, ஆணை பெண்ணிடமிருந்து சொற்கள் பிரித்திருக்கின்றன இது அறிவர்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கத் தெரிந்தது அதுவரை இப்படித்தான்.

சொற்கள் இல்லாமல், புரிந்து கொள்ளாமல் கூட காதலர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கிறார்கள்.

67. பரந்த ஒத்திசைவு

இந்தப் பரந்த திருக்குமறுக்கான நிலத்தில் எல்லாவற்றிலும் இருந்து எல்லாம் வருகின்ற நிலத்தில், பரந்த ஒற்றுமையைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. செங்கதிர் ஒளிர்கிறான் வானம் பொழிகின்றது சமவெளியிலருந்து மலைகள் தோன்றுகின்றன ஆறுகள், கடலை நோக்கி ஓடுகின்றன. நானிலம் சீர்மையான மூச்சுடன் வாழ்கிறது. அங்கே பிறப்பும், இறப்பும் என்ற தொடக்கம் உள்ளது