84 變
தாவோவின் - ஆண்பெண் அன்புறவு
சம நிலையிலிருக்க ஆணும் பெண்ணும மென்மையாக இருப்பது இன்றியமையாதது அவர்களிடம காணும் மென்மைதான் அவர்களை ஒன்று சேர்க்க உறுதி அளிக்கும் அவர்களது கடினப் பண்போ அவர்களை வேறாக்கும உறுதி அளிக்கும்
104. ஆழ்ந்த அமைதி
நாம் ஆழ்ந்த பேசாமையிலிருந்து உருவாகி நீடிக்கும் அமைதியால் வளப்படுத்தப்படுகிறோம்
அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கும் பெரும் கூச்சலகள் கேட்கப்படாத பேரிரைச்சலாக மாறுகின்றன ஆனால் அமைதியான பேச்சு ஆழமாக நுழைந்து ஒவ்வொரு நாளையும் நடத்திச் செல்லும், தூய்மையான நீரைப் போலக் கண்ணுக்குப் புலப்படாமலும், சிற்றோடை போல ஒலி எழுப்பாமலும் அவை வளர்ந்து, நெருங்கிய தோழர்களாகவும், ஆசானாகவும் மாறுகிறார்கள் மென்மையாகப் பேசு, ஒருவர் மற்றவரிடம் உள்ள ஆழ்ந்த ஓசையற்றிருப்பதைக் கவனி
105. ஒவ்வொன்றிலும் மெய்யறிவு
பெண்ணின் மென்மை ஆணின் வன்மையைச் சூழ்ந்துள்ளது. ஆணின் வன்மை பெண்ணின் நளினத்தைச் சுற்றி உள்ளது. இதுதான் உலகப் போக்கு