பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

"தமிழ்த் தெய்வமே! நெல்லிக்கனியை உண்ணாமலேயே, நான் சாவை வென்றவனாகி விட்டேனே, தங்களது அமுதப் பாடல் மூலம்! இந்த ஒரு பாக்கியத்தைப் பெற நான் என்ன தவம் செய்தேனோ? ஆஹா, உங்களது கருணையே கருணை!" என்று உணர்ச்சி வசப்பட்டான் அதியமான்.

ஆம்; அதியமான் நெடுமான் அஞ்சியும் ஔவைப் பிராட்டியைப் போன்று தமிழ் இலக்கியத்தில் என்றென்றும் நிலைபெற்று விட்டவர்களே அல்லவா?

தா-2