23
ஆட்டும் விலங்குகளையே தனது ஐம்பெருங்குழுவில் சேர்த்துக் கொண்டது. விழாவுக்கு சகல ஜீவராசிகளும் வருகை தந்தனர். மனிதர்கள் வாழும் இடங்களுக்கும் ஒலைகள் அனுப்ப ஏற்பாடு செய்யும்படி ஆணை இட்டது நரி ராஜா. ஆனால் ஏனே மனிதர்களில் ஒருவர்கூட முடிசூட்டு வைபவத்துக்கு வரவில்லை.
இதை அறிந்த கரியார் மனிதர்களின் இத்தகைய அவமரியாதை நடப்புக்கு விளக்கம் கோரிநகடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தனது அங்தரங்கக் காரியதரிசியான நாயிடம் தெரிவித்தது. அது சாமான்யமான காயல்ல; துப்பறியும் நாய் ஜாதி !
முடிசூட்டும் வைபவம் கடந்தது. கரியாருக்குத் தலையில் கிரீடம் சூட்டப்பட்டபோது எல்லாக் குடிபடைகளும் பலத்த ஆரவாரத்துடன் கைதட்டின. ஆனல் ஒருவரிசையில் இருந்த காக்கைக் கூட்டம் மாத்திரம் கை தட்டவில்லை. அக்காக்கையின் பிரதிநிதி வெகு ஆணவமாக சபையின் மேல் மாடப் பொங்தொன்றில் வீற்றிருந்தது. இதைக் கண்ட நரி ஆத்திரம் அடைந்தது. அதன் பற்கள் துடித்தன. தந்திர மூளை மிகவும ஆத்திரப்பட்டது. ஆனாலும், விழாவில் ரசாபாசம் எதுவும் நிகழக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருங்தது நரி. காரணம் இதுதான் புரட்சி நடத்தி, ஜனநாயக ஆட்சியை மனிதர்கள் உலகினைப்போல