பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அந்த முடிவு என்ன தெரியுமா ? சீனுக்காரன் செய்தனுப்பிய வெடிகளைச் சுடாமல், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகளையும் மத்தாப்பூக்களையுமே உபயோகிப்பது என்பது தான் அவர்கள் செய்து கொண்ட தீர்மானம் எடுத்துக் கொண்ட முடிவும் ஆகும் !

அந்தக் கூட்டத்திலே, அங்கங்கே சிறுவர்களும் சிறுமிகளும் மத்தாப்பு கொளுத்தியும் வெடி சுட்டும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவியாக, பதவிசான குணத்துடன் மாடத்தில் இருந்தது அகல் விளக்கு ஒன்று.

அகலுக்கும் அவ்வேடிக்கைகளைக்காண உள்ளுற மகிழ்வுதான் ! அந்தக் களிப்பில், காது துளைபட எழுந்த சத்தங்களைக்கூட அது பொருட்படுத்தாமல், தன்னுடைய கடமையில் கருத்துப்பதிந்திருந்தது !

"டோய், பார்த்தாயாடா மத்தாப்பூ ஜோதியை !’ என்றான் ராமன். அவன் ஏழை வீட்டுப்பிள்ளை.

ஆமாண்டா, ஆமாண்டா ! இந்த அகல் விளக்கும்தான் இருக்குதே, துளியூண்டு வெளிச்சத்தோட!...ப்பூ!...” என்று நையாண்டி பேசினன் மோகன். இவனே பங்களாவுக்குடைய பிள்ளை

இந்த உரையாடலின் கேலியை உணர்ந்த் அகல் விளக்குக்கு மனத்தில் துயரம் மூண்டது. அது பெருமூச்சு விட்டது.