பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


கிடைத்துவிட்டார்...! தேவியே அவரை நேரில் கொண்டு சேர்த்து விட்டிருக்கிறதென்று தான் ஊர் உலகம் பேசியது!

“ராஜேந்திர பாலா...”

"தந்தையே...”

தந்தையும் தனயனும் ஆரத் தழுவிக்கொண்டார்கள் ; ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டார்கள்.

விருந்து தொடங்கியது, மந்திரி பிரதானிகள், ராஜப் பிரமுகர்கள். அயல்தேசத் தூதர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

மன்னர்பிரானும் இளவரசரும் இனிப்புப் பதார்த்தத்தைச் சுவைத்தார்கள்; சிரித்துக் கொண்டார்கள்.

அப்போது—

"மன்னர் மன்னரே, ஈழத்திலிருந்து ராஜதூதன் ஒருவன் வந்திருக்கிறான் ஓர் இளைஞனையும் அழைத்துக்கொண்டு. உங்கள் தரிசனம் வேண்டுகிறான்.”

"வரச்சொல்! ஓடு!”

தூதன் வந்தான் ; கூட இளைஞனும் வந்தான்!

"வேந்தே, ஈழத்து மன்னன் பராக்கிரமசீலன் இவ்விளைஞனைத் தங்களிடம் சேர்ப்பிக்கச் சொல்லியுள்ளார்கள். இவர் தங்கள் திருக்குமாரர் என்பதை நேற்றுத்தான் அரசர் அறிய முடிந்தது. பல

தா.—6