பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கல் லா ைம 2 15 f மருவியுள்ளது. இந்த நசை கல்வியால் இசை பெற்று வருகிறது: கல்லாமையால் வசையுற்று இழிகிறது. நூல்களே நன்கு கல்லாதவன் சபையில் ஒன்று: சொல்ல அவாவுதல் அரங்கு இல்லாமல் வட்டு ஆடியது போல் தட்டழிந்து படும் என்று முன்னர் உரைத்தார்: இதில் அந்த ஆசை அவலம் தோய்ந்த அவமானமேயாம் என ஒர் உவமானத்தால் நயமா உணர்த்துகின்ருர். இளமையில் கல்லாமல் கழிந்தவன்பின்பு எவ்வளவு: இழிவுகளே அடைந்து எங்கும் துன்பமுற நேர்கின்ருன் என்பதை இங்கு இனமா அறிந்து வருந்துகிருேம். கல்லாதவனுடைய இழி கிலேகளைத் தெளிவாக விளக்குதற்குச் சில எடுத்துக் காட்டுகளே இணேத்துக் காட்டிப் பரிகாசமாப் பரிந்து உணர்த்தி வருகிரு.ர். விளேயாட்டுச் சிறுவர்களின் பிழைபாடுகளே முத லில் குறித்தார்; கல்லாதார் சொல்லாட விழைதற்குப் பேடியின் பிழையான நசையை இதில் கூறியுள்ளார். முலே இரண்டும் இல்லாதாள். இந்தவாசகம் இங்கே தலே நிமிர்ந்து வந்துள்ளது. பலர் கூடியிருக்கும் சபையில் கூசாமல் பேசமுடி யாத சொல்லே அடிகள் இங்கே அழுத்தமாச் சொல்லி யிருக்கிரு.ர். அவையின் கண் தகுதியாகவும் மரியாதை யாகவும் பேசவேண்டும் என்று போதனே செய்ய வந்த இடத்தில் இந்தச் சோதனை மூண்டுள்ளது. திருந்திய பண்பும் பெருந்தகைமையும் சிறந்த நாகரிகமும் ஒருங் கே நிறைந்துள்ள தேவரும் இவ்வாறு கூறியுள்ளாரே! என பாவரும் விபத்து பேச இது விளேத்திருக்கிறது. @&ు என்ற உடனே பச்சையான கொச்சை மொழி கான்து பலர் இலச்சைப் படுவதாகப் பாசாங்கு காட்டு .ென்றனர். அங்த உறுப்பில் அவர் கொண்டுள்ள மையல் மயக்கங்களே மருமமாய் வெளிப்படுத்து கின்றனரே ; ல் ஜி விதய விவேகங்களே இதமா விளக்கி விடவில்லை.