பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரி ந்து வி இன யாடல் 2741 அடுத்த காரியத்தை உறுதியாய் முடித்துவர உரியன் வரையே அரசர் யாண்டும் தேர்ந்து வினேமேல் ஏவுவர். இவ் வுண்மை உரோமபதன்பால் உணர வந்தது. ச ரி தம். இவன் அங்க தேசத்து வேந்தன். அரிய பல கலே க&ள நெறிமுறையே பயின்று தெளிந்தவன். அதிசய ஆற்றல்கள் உடையவன். மதியூகியான இவனது ஆட்சி மாட்சியாய் நடந்து வந்தது. வருங்கால் ஒருமுறை மாரி மாறி நின்றது. மழைவளம் சுரங்துவர விரும்பிய இவன் கலைக்கோட்டு முனிவரைத் தன் நாட்டுக்கு அழைத்து வரக் கருதின்ை. அவர் அரிய மாதவர்; ஆசை யற்றவர்: எவரையும் மதியாதவர்: மாந்தரை விலங்குகள் என்று: எண்ணி யிருப்பவர். அந்தப் பு: ண் ணி ய முனிவசை நேரே காண வேண்டும் என்று வேணவாவுற்று கின்ற இவன் அதற்கு ஆன உபாயங்களே ஆராய்ந்தான் அரிய மதி மந்திரிகளாலும், பெரிய தந்திரிகளாலும், பேர் பெற்ற பண்டிதர்களாலும், வேறு எவராலும் அவரைக் கொண்டுவர முடியாது என்று தெரிந்தான். அங்த மாதவரை ஆதரவுடன் அழைத்துவர வுரியவர் தனது அவையில் நடித்து வருகிற மா த ர் இருவரே என்று: மன்னன் மனந்துணிந்தான். அந்த அழகிய மங்கையர் இருவரும் உளம் உவந்து இசைந்தார். இசையவே காரிய சித்தியை உணர்ந்து உயர்ந்த வரிசைகள் தங்து சிறந்த ஒரு தேரில் அவரைச் சீருடன் அனுப்பின்ை. ஒதநெடுங் கடலாடை உலகினில் வாழ் மனிதர்விலங் கெனவே யுன்னும் கோதில்குனத் தருந்தவனைக் கொணரும் வகை யாவதெனக் குனிக்கும் வேலைச் சோதிநுதல் கருநெடுங்கண் துவரிதழ்வாய்த் தரள நகைத் துணேமென் கொங்கை மாதர் எழுந்து யாம்.ஏ.கி அருந்தவனேக் கொணர்தும் என வணக்கம் செய்தார்: ( )