பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா ச் சா வா ைம 2827 இந்த அரிய ஒளியை மறவியாளர் இழந்து விடுத லால் அவரது வாழ்வு வறியதா யிழிந்து வசைபடிந்து ஒழிகிறது. மறப்பு எவனே மருவி வருகிறதோ, மதிப்பு அவனே ஒருவி விடுகிறது. எப்பால் நூலோர்க்கும் = எவ்வகையான நூல்களே உடையார்க்கும். நூல்கள் பலவகை நிலையின; கொள் கைகளும் பலவகையின. மாறுபாடுகள் உடையன. அறநூல், பொருள் நூல், இன்பநூல், வீட்டு நூல் என இவ்வாறு பல பிரிவுகள் உள. இத்தகைய வேறு பாடுகளுடைய நூல்கள் யாவும் பொச்சாப்பார்க்கு புகழ் இல்லை என்பதை ஒரு முகமாய்த் துணிந்து தெளிந்து உறுதியா முடிவு செய்துள்ளன. மேலான அறிவுடைய நூலோர் யாவரும் மறவி பால் நேரும் பழி யிழிவுகளைத் தெளிவாக வுணர்ந்துள் வளனர்; அந்த உண்மை இங்ங்னம் வெளியாய் கின்றது. உயிர்க்கு உரிய உறுதி நலனே ஒர்ந்து செய்யும் உணர்வு, மறதியால் ஒழிந்து போகிறது; போகவே புகழ் அறம் முதலிய உயர் நலங்களே அந்த மறதியாளன் இழந்து விடுகிருன். அறிவு கற்ற கல்வி வாய்மை அன்புமுன் படுத்தநல் உறவுநட்பு ஒழுக்கம் மேன்மை ஒருவர்செய்த உதவிசீர் பிறவும் இன்ன செய்கைமற்ற தெவையும் நெஞ்சு பேர்வென மறதி யுற்ற போது யாவர் மனிதர் தேவர் மதியுளர் : (1) பிரகலாதன் மாயைேடு பின்பு போர் புரிந்ததும், சரத வாழ்வு சுக்கி ரீவர் தாமியைந்து இராமர்பால் வரவு தாமதித்ததும், துரோணர்நட்பும் வாய்மையும் துருபதேயன் மாற்றிவந்த போதிகழ்ந்து சொன்ன தும்: (2) மகிழ்ந்தனைத்துநாளேநின்கண் வருதும் என்ற வாய்மையைச் சகுந்தலைக்கு மகினனர் தவிர்ந்தயர்த்த தன்மையும் புகுந்தது எத்திறத்தில்? என்ஒர் பூவையால் உளம்திகைத்து இகந்த புத்தியோரை யின்னம் எண்ணில் எண்ணி லோர்களால். (3)