பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 Ꭵ?Ꮽ இதனைச் சிந்தனே செய்து தெளிங்து சீருடன் வாழுக. மடிபுகுந்த போதே மனிதன் இழிவன்; குடியும் அழியும் குலைந்து. மடி படியாமல் வாழ். மடியை மடி. 604 அன்று புகழ்ச்சத்தி யாதனனும் ஏன்மடிந்து குன்றி யிழிந்தான் குமரேசா-நின்ற குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர் க்கு. ) یعتی ( இ-ள். குமரேசா! மடி மிகுந்திருந்த சத்தியாதனன் ஏன் குடி மடிந்து பழி படிந்து இழிந்து அழித்தான்? எனின். மடி மடித்து மாண்ட உஞற்று இலவர்க்கு குடி மடித்து குற்றம் .ெ ப ரு கு ம் என க. மடி யால் விளேயும் குடிகேடுகள் அறிய வங்தன. சோம்பலுள் அழுங்தி மாண்புள்ள முயற்சி இல்லா தவர்க்குக் குடியும் அழியும்; குற்றமும் விளேயும். மடி யுடையான் குடி அவன் சாகு முன்னரே சாம் என முன்பு அறிந்தோம்; இதில் அவன் இ ழி பழி யாளயைப் அழிந்து ஒழிவான் என அறிகின்ருேம். குடி மடிந்து = குடும்பம் அழிந்து. மடி மடிந்து = சோம்பலில் ஆழ்க்து. வேட்டம் செல்லாது மடிந்து. (பட்டினப்பாலே 93) மடிந்து இதில் குறித்திருத்தல் அறிக. உஞற்று = முயற்சி; ஊக்கம். முயற்சி எவரையும் உயர்ச்சியுறச் செய்வது ஆத லால் அ.து உஞற்று என உற்றது. உள்ளம் துணிந்து எவ்வழியும் தளராமல் ஊக்கி முயல்வது என்னும் கு றி ப் பு உஞற்றுதலில் உறைந்துள்ளது.