18
திருக்குறளில் செயல்திறன்
கோழிச்சண்டை, ஆட்டுச்சண்டை முதலியவைகளைப் பார்க்க அதிக ஆசை உண்டாகும். அதுபோல தரையிலிருந்து யானைச் சண்டையைப் பார்க்க முடியாது. பார்க்கும்போது பார்ப்பவர்க்கு துன்பமும் வரக்கூடும். அதற்காக அவர்களைக் குன்றின்மீது நின்று யானைச் சண்டையைப் பார்த்து மகிழச் சொல்கிறார் திருவள்ளுவர். நிறையப் பொருளை வைத்துக் கொண்டு வணிகத்தையோ தொழிற்சாலையையோ நடத்துகின்ற செயல்திறன். குன்றின்மீது இருந்து யானைச் சண்டையைக் கண்டு மகிழ்வது போன்றது என்று வள்ளுவர் விளக்குகிறார்.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. (758)
இது ஆறாவது யானை.
7. மயங்காமல் செய்
இங்கும் ஒரு யானை நிற்கிறது. பக்கத்தில் ஒரு அழகிய பெண்னும் நிற்கிறாள். ஏதோ ஒரு வேலையாகப் போகிற ஒருவன் இங்கு நின்று யானையின் முகத்தையும், அதன் தலையில் உள்ள இரு குமிழ்களையும் அதன்மேல் போர்த்தியிருக்கும் "முகபடாம்" என்ற சேலையையும், பக்கத்தில் நிற்கின்ற அழகிய பெண்ணையும், அவளது எடுப்பான நெஞ்சையும், அதன்மேல் அணிந்துள்ள சேலையையும் மாறிமாறிப் பார்க்கிறான். அவனுக்கு இந்த இரண்டும் ஒன்றுபோலவே தோன்றுகிறது.
இறுதியில் அவன் கூறியது என்ன தெரியுமா? "கொல்லும் குணமுடைய இந்த யானை என்னைக்