பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

27


இதுகாறும் கூறியவற்றால் திருவள்ளுவர் தமது திருக்குறளில் செயல் திறனைப்பற்றி எவ்வளவு அழகாக, ஆழமாக, விரிவாக, அழுத்தமாகக் கூறியிருக்கிறார் என்பது நன்கு விளங்கும்.

தம்பி, படித்தாயா? இன்னும் ஒருமுறை படி, நன்கு சிந்தித்து உணர். அந்த அளவோடு விட்டுவிடாதே. செயல்திறனைப் பெற்றுச் செய்யவேண்டியவைகளைச் செய்து சிறப்பெய்தி வாழ்.

என்ன பண்ணுகிறது, என்ன செய்கிறது?

என்ற சொற்களை நீ ஒருபோதும் சொல்லாதே. அவை ஒன்றும் பண்ணத் தெரியாதவர்களும், ஒன்றும் செய்யத் தெரியாதவர்களும் கூறுகிற சோம்பேறித்தனமான சொற்கள். அவர்களை வெறுத்து ஒதுக்கு; வெற்றிபெறு! நல்லதையே எண்ணு! நல்லதையே சொல்லு! நல்லதையே செய்! நல் வாழ்வு வாழ்வாய்!

                  வாழட்டும் தமிழகம்!

                வளரட்டும் செயல்திறன்!!