பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

திருக்குறள்


ஒரு பொருளின் உயர்வு தாழ்வு கருதி அதனை மதிக்காமல் அதில் உள்ள உண்மையை அறிந்து கொள்வதே சிறந்த அறிவாகும். 355

6.கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

இவ்வுலகிலே படிப்பதற்குரிய நல்ல நூல்களைப் படித்து மெய்ப் பொருளை உணர்ந்தவர், மறுப்டியும் இவ்வுலகத்தில் பிறந்து துன்புறாத சிறந்த வழியை அடைய முற்படுவர்.

ஈண்டு-இவ்வுலகத்தில்; தலைப்படுவர்-அடைய முற்படுவர்; வாரா-பிறவாத; நெறி-நல்வழி. 356

7.ஒர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

ஒருவனது உள்ளம் மெய்ப் பொருளை ஆய்ந்து உணருமானால், மறுபடியும் அவனுக்குப் பிறப்பு உண்டு என்று நிச்சயமாக எண்ண வேண்டியதில்லை.

ஒர்த்து-ஆராய்ந்து; உள்ளது-இருப்பதாகிய மெய்ப் பொருள்; ஒரு தலையா-நிச்சயமாக; பேர்த்து-மறுபடியும்; உள்ளவேண்டா - நினைக்க வேண்டா. 357

8.பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பிறத்தலுக்குக் காரணமாகிய அறியாமை நீங்கும் பொருட்டு மோட்ச வீட்டிற்குக் காரணமாகிய பரம் பொருளை ஆராய்ச்சியால் கண்டு அறிவதே உண்மையான அறிவு.

சிறப்பு-மோட்சவீடு; செம்பொருள்-பரம்பொருள். 358

9.சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள கடவுளாகிய மெய்ப் பொருளை உணர்ந்து, உலக ஆசை முற்றிலும் நீங்கும்படி ஒருவன் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டால், அவனை அடைய இருந்த துன்பங்கள் அவனுடைய உணர்வு

ஒழுக்கங்களை அழித்துப் பின் அவனை அடைய மாட்டா.