ஊழ்
93
ஊழ் இயல்
38. ஊழ்
1.ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
கைப்பொருள் உண்டாவதற்குக் காரணமான ஊழ்வினையால் சோம்பலின்மை உண்டாகும். கைப்பொருள் அழிவதற்குக் காரணமாகிய ஊழ்வினையால் சோம்பல் ஏற்படும்.
ஆகூழ்-பொருள் ஆதற்குரிய ஊழ்; ஊழ்-முறை, நியதி, ஒழுங்கு, விதி, தெய்வம்; அசைவு-சோம்பல்; அசைவின்மை-சோம்பலின்மை; மடி-சோம்பல். 371
2.பேதைப் படுக்கும் இழவூழ்; அறிவகற்றும்
ஆகலுாழ் உற்றக் கடை.
பொருள் இழப்பதற்குக் காரணமான ஊழானது வரின், அவ்வூழ் ஒருவனுக்கு நல்ல அறிவு இருந்தாலும், அந்த அறிவை மறைத்து அறியாமையையே கொடுக்கும். பொருள் ஆதற்குக் காரணமான ஊழானது வரின், அஃது அவன் அறிவு சுருங்கி இருந்தாலும், அவ்வறிவினை அதிகரிக்கச் செய்யும்.
பேதைப் படுக்கும்-அறியாமையில் செலுத்தும்; அறிவு அகற்றும்- அறிவை விரிவாக்கும். 372
3.நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
நுட்பமான நூல்கள் பலவற்றையும் ஒருவன் கற்றானாயினும், அவனுக்கு நுட்பமான அறிவு உடனே உண்டாகி விடாது. அவனுக்கு ஊழினால் இயல்பாக இருக்கின்ற அறிவிற்குத் தக்கபடியே அந்த நுண்ணிய நால்களால் ஆகிய அறிவும் வெளிப்பட்டுத் தோன்றும். 373
4.இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.