பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

திருக்குறள்


உடையார்.செல்வம் உடையவர்: ஏக் கற்று-ஏங்கி யிருந்து; கற்றார் உயர்ந்தார் என்று ஒரு சொல் வருவிக்க: கல்லாதவர் கடையர் என்று கூட்டுக. 395

6.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

- மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணறு, தோண்டுமளவுக்கு ஏற்ப நீர் சுரக்கும். அது போல மக்களுக்கு அறிவானது அவர்கள் எவ்வளவு படிக்கின்றார்களோ, அந்த அளவுக்கு ஏற்ப விளக்கமடையும். 396

7.யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கால்லாத வாறு.

கல்வியில் சிறந்த ஒருவனுக்கு எந்த நாடும் அவனுடைய சொந்த நாடு போன்று இன்பம் பயப்பதாகவே இருக்கும். அவ்விதமே எந்த ஊரும் அவனுடைய சொந்த ஊர் போன்று அவனுக்கு இன்பத்தைத் தரும். (இதைப் பலரும் நேரில் கண்டு அறிந்திருந்தும்) ஒருவன் தான் சாகின்ற வரையிலும், கல்வி கற்காமலேயே காலங்கழிப்பது என்ன காரணமோ தெரியவில்லை. 397

8.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் ஒருவன் கல்வி கற்று அதனால் பெற்ற அறிவானது அப்பிறவியோடு இல்லாமல் அடுத்து வரக்கூடிய பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினை அளிக்கும் தன்மையுடையதாம்.

எழுமை-ஏழு வகைப் பிறப்பு; மக்கள், தேவர், நரகர், மிருகம், பறவை, நீர் வாழ்வன, தாவரம் ஆகியவை. எனினும் இங்கே எழு பிறப்பு என்பதற்குப் பல பிறப்புக்களிலும் என்பதே பொருள். ஒருமை-ஒரு பிறப்பு; ஏமாப்பு-பாதுகாவல். 398

9.தாமின் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தாம் இன்புறுவதாகிய கல்வியினால், உலகத்தாரும் இன்பமடைகின்றனர். அவ்வாறு தமக்கும் பிறக்கும் இன்பம்