114
திருக்குறள்
7.இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.
குற்றம் கண்டால், அக்குற்றத்தைப் போக்குவதற்காக வற்புறுத்தி அறநெறி கூறும் பெரியாரைத் துணையாகக் கொண்டு, ஆட்சி புரியும் அரசரைக் கெடுக்கும் வல்லமையுடைய பகைவர் எவர் இருக்கின்றனர்? எவரும் இலர்.
இடித்தல்-கேட்போர் மனத்தில் படும்படி வற்புறுத்திக் கூறுதல் என்பது இங்கே பொருள்; துணை யாரை ஆள்வாரை-துணைவராகக் கொண்டு ஆட்சி புரிபவரை. 447
8.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
குற்றம் கண்டவிடத்து, வற்புறுத்தி அறநெறி சொல்லக் கூடிய பெரியோர்களைத் தனக்குத் துணையாகக் கொள்ளாத பாதுகாவல் அற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லா விட்டாலும் தானே கெட்டுப் போவான்.
ஏமரா-ஏமம் மருவாத (ஏமம்-காவல்; மருவாத-பொருந்தாத) காவல் இல்லாத,
பாகன் இல்லாத யானை போன்று தனக்குத் தானே தீங்கினைத் தேடிக் கொள்வான் என்பது பொருள். 448
9.முதலிலார்க ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை.
முதற் பொருள் இல்லாத வணிகருக்கு, அதனால் வரும் இலாபம் இல்லை. அது போல் துன்பம் வந்த போது தாங்கக் கூடிய துணையாகிய பெரியோரை இல்லாதவர்க்குக் கெடாமல் நிலைத்திருக்கும் தன்மை இல்லை.
வணிகருக்குப் பொருள், அறிவு, உழைப்பு இம்மூன்றும் முதற் பொருள் ஆகும். ஊதியம் - இலாபம்; மதலை - பாரம் தாங்கக் கூடியது; தூண், சார்பு-துணை; நிலை-விழாமல் நிலைத்து இருக்கும் தன்மை. 449
10.பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.