பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

திருக்குறள்


மீது பாய்ந்து அதைத் தாக்குதற்காகப் பின்புறம் கால் வாங்குதல் போன்றது.

ஊக்கம்-மனவலிமையின் மிகுதி; ஒடுக்கம்-அடங்கியிருத்தல்; தகர்-ஆட்டின் பொதுப் பெயர்; ஆட்டுக்கிடாய்; தாக்கற்கு- எதிர்ப்பதற்கு; பேர்தல்-பின் வாங்குதல்; தகைத்து-தன்மையுடையது. 486

7.பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து)
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பகைவர் தமக்குக் கெடுதலைச் செய்த அப்போதே அறிவுடையோர் அவர் மீதுள்ள கோபத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளமாட்டார்; அந்தப் பகைவரை வெல்லுங் கோபத்தை மறைத்து வைத்திருப்பர்.

பொள் என-உடனே விரைவாக; புறம் வேரார்-வெளியே கோபத்தைக் காட்டிக் கொள்ள மாட்டார்; வேர்தல்-கோபம் கொள்ளுதல்; ஒள்ளியர்-அறிவுடையவர். 487

8.செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

காலம் நன்கு அமையாத போது, பகைவரைக் கண்டால் அவருடைய குற்றங்களைத் தாங்கிக் கொண்டு, அமைதியாக இருத்தல் வேண்டும். அந்தப் பகைவருக்கு முடிவு காலம் வந்த போது அவருடைய நிலை தலை கீழாக மாறி விடும்.

செறுநர்-பகைவர்; சுமத்தல்-தாங்கிக் கொண்டு இருத்தல், பணிவோடு இருத்தல்; இறுவரை-முடிவுகாலம்; கிழக்காம் தலை-தலைcகீழாக மாறும்;cகிழக்கு-கீழ். 488

9.எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

கிடைத்தற்கு அருமையான காலம் வந்து வாய்த்த பொழுது, செய்வதற்கு அரிய செயலை அப்போதே செய்து முடித்தல் வேண்டும்.

எய்தற்கு அரியது-கிடைத்தற்கு அரியது; இயைதல்-அடைதல்; அந்நிலையே-அப்போதே. 489