பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

திருக்குறள்


அயலான் ஒருவனைச் சிறிதும் ஆராய்ந்து பாராது, அவன் மீது நம்பிக்கை வைக்கும் ஒருவனால், அவன் துன்பப்படுவதல்லாமல் அவன் கால்வழியினரும் நீங்காத துன்பத்தை அனுபவிக்கும்படி நேரும். 508

9.தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

நன்றாக ஆராய்ந்து பார்க்காது யாரையும் தெளிதல் கூடாது. அவ்வாறு ஆராய்ந்து பார்த்த பின், அவரிடம் எந்தச் செயலைக் குறித்து ஆராய்ந்து தெளிந்து கொள்ளலாமோ, அந்தச் செயலைக் குறித்து ஆராய்ந்து தெளிக. 509

10.தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஆராய்ந்து பார்க்காது ஒருவனிடம் நம்பிக்கை வைத்தலும், ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்ளுதலும் என்றும் நீங்காத துன்பத்தைத் தரும். 510

52. தெரிந்து வினையாடல்


1.நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

ஒரு செயலில் உள்ள நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஆராய்ந்து பார்த்து, நன்மையையே விரும்பும் குணம் உடைய ஒருவனே அச்செயலுக்கு உரியவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான்.

தெரிந்து வினையாடல் - ஒருவன் செய்யக் கூடிய செயலைத் தெரிந்து, அச்செயலுக்கு அவனை ஏவுதல்; நலம் புரிந்த நன்மையான்-நன்மையை விரும்பும் குணமுடையவன். 511

2.வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

பொருள் வரும் வழிகளை அதிகரிக்கச் செய்து, அப்பொருளால் வளத்தை உண்டாக்கி, அப்போது