134
திருக்குறள்
6.செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
தொழில் செய்பவனுடைய திறமையினை ஆராய்ந்து, செயலின் தன்மையினையும் ஆராய்ந்து, இந்தக் காலத்துக்கு இது தகுந்ததுதானா என்பதையும் அறிந்து, அந்த வேலையை அவனிடம் தந்து செய்யச் சொல்லுதல் வேண்டும். 516
7.இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்த வேலையை இந்த விதத்தினால் இவன் முடித்தல் கூடும் என்பதை ஆராய்ந்து அறிந்து, பிறகு அந்த வேலையை அவனிடம் ஒப்புவித்தல் வேண்டும்.
அந்த அந்த வேலையில் வல்லவனையே அந்த அந்த வேலையில் அமர்த்த வேண்டும். ஒரு வேலையில் வல்லவன் எல்லா வேலையிலும் வல்லவனாக இரான் என்பது கருத்து. 517
8.வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
இந்த வேலைக்கு இவன் தகுந்தவன் என்று ஆராய்ந்து அறிந்து பின்பு, அவனை அந்த வேலையைச் செய்வதற்கு உரியவன் ஆகுமாறு செய்தல் வேண்டும் (அந்த வேலையில் அவனை அமர்த்தல் வேண்டும்.) 518
9.வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.
>!--- “கேண்மை வேறாக” என்று தவறாக சீர் பிரிக்கப் பட்டுள்ளது. மூலத்துடன் ஒப்பிட்டு சரி செய்யப் பட்டுள்ளது.---> தான் செய்ய மேற்கொண்ட வேலையின் மீது கண்ணும் கருத்துமாக இருந்து முயல்பவனது நட்பினைத் தவறாக நினைக்கும் தலைவனிடமிருந்து செல்வம் நீங்கி விடும்.
வினைக்கண் வினையுடையான்-தன் வேலையின் கண் இடை விடாத முயற்சி உடையவன்; கேண்மை-நட்பு;: வேறாக நினைத்தல்-பகைவர் சொற்கேட்டுத் தவறாக எண்ணுதல்; திரு . செல்வம். 519
10.நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.