பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடுங்கோன்மை

145



மக்களின் கண்ணீர்த் துளிகளே, அந்த அரசனது செல்வத்தைத் தேய்த்து அழிக்கும் ஆயுதம் ஆகும்.

அல்லல்-துன்பம்; ஆற்றாது-தாங்க முடியாமல்; படை-ஆயுதம். 555

6.மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

அரசருக்கு நிலை பேறுடைய புகழைத் தருவது அவர் தம் நீதி வழுவாத செங்கோல் முறையே ஆகும். அந்தச் செங்கோல் முறைமை இல்லையானால், அவர்க்குப் புகழ் நிலை பெறாமற் போய் விடும்.

மன்னுதல்-நிலை பெற்றிருத்தல்; மன்னா-நிலை பெறமாட்டார்; ஒளி-புகழ். 556

7.துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு,

மழை இல்லாமை இவ்வுலகில் வாழும் உயிர்கட்கு எத்தகைய துன்பத்தை தரும்? அவ்வாறே ஓர் அரசன் கீழ் வாழும் குடிகட்கு அவன் அருள் இல்லாதிருப்பது துன்பத்தைத் தரும்.

துளி-மழைத் துளிகள்; ஞாலம்-உலகம், இங்கே உலகில் உள்ள உயிர்களைக் குறிக்கும்;அளி-கருணை. 557

8.இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

நீதி முறைப்படி ஆட்சி புரியாத கொடுங்கோல் அரசன் கீழ் வாழ நேர்ந்தால், பொருள் அற்ற வறுமை நிலையை விடச் செல்வத்தைப் பெற்றிருக்கும் நிலை மிகவும் துன்பமானது.

இன்மை-பொருள் இன்மை, வறுமை; இன்னாது-துன்பம் தருவது; உடைமை-பொருள் உடைமை. 558

9,முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

அரசன் ஒழுங்கு தவறி ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறி மேகம் மழை பொழிதலைச் செய்யாது.