பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினைத்திட்பம்

175



2.ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

ஒன்றைச் செய்ய முயலும் போது, இடையூறு வருதல் கூடும். அத்தகைய இடையூறு வருவதற்கு முன்பே அதனை உணர்ந்து நீக்குதலும், அவ்விதம் முயன்றும் இடையூறு நேரின், அதன் பொருட்டு உள்ளம் தளராமையும் ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆய்ந்தவர் தம் கொள்கையாகும்.

விளக்கம்: வினைத்திட்பம் இரு வகைப்படும். ஒன்று இடையூறு நேரா வண்ணம் முன்னரே அறிந்து காக்கும் உள்ள உறுதி. மற்றொன்று இடையூறு வந்த காலத்தும் உள்ளம் தளராமை.

ஊறு-துன்பம்; ஒரால்-நீக்குதல்; ஒல்காமை-உள்ளம் தளராதிருத்தல்; ஆறு-வழி; கோள்-கொள்கை. 662

3.கடைக்கொட்க செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.

ஒருவன் ஒரு செயலைத் தொடங்கினால் அதை அதன் இறுதி வரையில் செய்து மீள்வதே அவனுக்கு ஆண்மையாகும் . இடையிலேயே மீள்வானாயின், அ ஃது அவனுக்கு நீங்காத துன்பத்தையே விளைவிக்கும்.

வேறொரு பொருள்: ஒருவன் தான் செய்யும் செயலை முடிவில் வெளியிடும்படியாக மறைத்துச் செய்வதே வினைத் திட்பம் ஆகும். அங்ஙனமின்றி, இடையில் அச்செயல் பலருக்குப் புலப்படும்படி ஒருவன் செய்வான் ஆயின், அத்தொழிலைச் செய்வானுக்கு அது நீங்காத துன்பத்தைத் தரும். 663

4.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

ஒரு செயலை இவ்விதம் செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியது ஆகும். அதனைச் சொல்லிய வண்ணம் செய்தல் எவர்க்கும் அரியது ஆகும். 664

5.வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.