பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

திருக்குறள்



3.போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

அரசரைச் சார்ந்த அமைச்சர், வீரர் முதலானோர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், அரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அத்தகைய பிழைகள் நேர்ந்தனவாகக் கேட்டு அரசன் ஐயுற்றானானால், அந்த ஐயத்தினின்று அவனைத் தெளிவித்தல் யாவர்க்கும் அரிதாகி விடும்.

போற்றுதல்-காத்தல்; அரியவை-பொறுத்தற்கு அரியவாகிய பிழைகள்; கடுத்தல்-ஐயுறுதல், சந்தேகித்தல்; தேற்றுதல்-தெளிவித்தல். 693

4.செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியோ ரகத்து.

பலப்பல சிறப்புக்கள் அமைந்த அமைச்சர் போன்ற பெரியாரிடத்துத் தங்கியிருக்கும் போது ஒருவன் செவியுள் மட்டும் படும்படி மற்றொருவன் மறைவாகச் சொல்லிக் கொள்ளுதலும், ஒருவனைப் பார்த்து ஒருவன் மெல்ல நகைத்துக் கொள்ளுதலும் ஆகியவற்றை முற்றிலும் நீக்கி ஒழுகுதல் வேண்டும். 694

5.எப்பொருள் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

அரசர் பிறரோடு மறைவாகப் பேசுவது எப்பொருள் குறித்தாயினும், அதனைச் செவி சாய்த்துக் கேளாமலும், அவரைப் பின் தொடர்ந்து வினவாமலும் அம்மறைப் பொருளை அவர் தாமே தம் வாய் விட்டு வெளிப்படுத்திய போது கேட்டறிதல் வேண்டும்.

ஒரார்-உற்றுக் கேளார்; தொடரார்-பின் தொடர்ந்து சென்று கேட்டறியார்; விட்டக்கால்-வெளிப்படுத்திய போது; மறை-இரகசியச் செய்தி. 695

6.குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

அரசனிடம் சில செய்திகளைச் சொல்ல விரும்பினால், அவன் உள்ளக் குறிப்பை அறிந்து, சொல்வதற்கு ஏற்ற