பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

திருக்குறள்



10.பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

'யாம் எம் அரசனுக்கு மிகவும் பழைமையானவராய் உள்ளோம்' என்று எண்ணிப் பழைமை பாராட்டித் தமக்குத் தகுதி அல்லாதவற்றைச் செய்து நட்புரிமை கொண்டாடுதல், அமைச்சருக்குக் கேட்டினைத் தரும். 700

71. குறிப்பறிதல்


1.கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

ஒருவர் தம் உள்ளத்தில் கொண்டுள்ள கருத்தை அவர் கூறாமலேயே, அவர்தம் முகத்தாலும் அவர்தம் கண்ணாலும் எண்ணி அறிய வல்லவன், எந்தக் காலத்தும் வற்றாத கடல் சூழ்ந்த உலகத்துக்கு ஒர் அணிகலன் ஆவான்.

கூறாமை-வாயால் விளக்கிச்சொல்லாமை; நோக்கி-கண், முகம், முதலியவைகளைக் கண்டு; குறிப்பறிதல்-ஒருவர் சொல்லாமலேயே அவர்தம் முகக்குறிப்பைக் கொண்டு தெரிந்து கொள்ளுதல்; வையக்கு - உலகத்துக்கு. 701

2.ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

ஒருவன் உள்ளத்தில் உள்ளதை அவன் முகத்தாலும் கண்ணாலும் ஐயமில்லாமல் உறுதியாக அறிய வல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு ஒப்பவனாக மதித்தல் வேண்டும்.

விளக்கம்; குறிப்பறிதலில் சந்தேக விபரீதமின்றி உள்ளது உள்ளவாறு அறிதல் வேண்டும் என்பதும், அவ்வாறு அறிய வல்லவன் தெய்வத்துக்குச் சமமானவன் என்று தெரிவிப்பதும் குறிப்பறிதலின் சிறப்பினைத் தெரிவிக்கின்றன. 702

3.குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாதும் கொடுத்தும் கொளல்.