பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படைச் செருக்கு

207



என் ஐ-என் தலைவன்; தெவ்விர்-பகைவர்களே; முன் நின்று- எதிர்த்துப் போர் புரிந்து; கல் நின்றவர்-மண்ணில் புதைக்கப் பெற்று நடுகல் வடிவாய் நிற்பவர்.

இங்ஙனம் வீரன் ஒருவன் தன் ஆண்மையைப் பகைவன் முன் உயர்த்திக் கூறுதலை 'நெடுமொழி வஞ்சி’ என்பர். 771

2.கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

காட்டில் பதுங்கியிருக்கும் ஒரு முயலைக் குறி பார்த்து அந்தக் குறி தவறாமல் அதைக் கொன்று வீழ்த்திய அம்பினை ஒருவன் பெற்றிருப்பதைக் காட்டிலும், வெட்ட வெளியிலே நின்று தன்னை எதிர்க்க வரும் ஒரு யானையைக் குறி பார்த்து எறிந்த வேல் குறி தவறியதாயினும், அந்த வேலைக் கையில் தாங்கிச் செல்வது சிறந்தது. -

ஒரு சிறிய தொழிலைச் செய்து, அதில் வெற்றி பெற்றுப் பெருமையடைய முயலுவதை விடப் பெரிய செயல்களைச் செய்து முடிக்கத் தொடங்கி, வெற்றி பெறாவிட்டாலும், அந்தப் பெருநோக்கமே சிறந்தது என்பது இக்குறளிள் கருத்து. 772

3.பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

பகைவரை அஞ்சாது எதிர்த்துப் போர் புரியும் வீரச் செயலைப் பெருமை மிக்க ஆண் தன்மை என்று அறிஞர் பாராட்டுவர். தன்னை எதிர்த்த அந்தப் பகைவனுக்கு ஏதோ ஒரு காரணத்தால் துன்பம் நேர்ந்த போது, அதையே நல்ல வாய்ப்பாகக் கொண்டு, அவனை வெல்ல எண்ணாமல், அவனுக்கு உதவி புரியும் பெருந்தன்மையை ஆண்மையின் கூர்மை என்பர். அஃதாவது அந்த ஆண்மையிலும் சிறந்ததோர் ஆண்மை என்று அறிஞர் கூறுவர்.

ஊராண்மை-உதவி செய்யுந்தன்மை; அதன் எஃகு-அந்தப் பேராண்மையினும் கூர்மையுடையது. அஃதாவது சிறப்பு வாய்ந்தது; எஃகு-கூர்மை.

இலங்கை வேந்தன் போரில் தோற்றுத் தானை முழுதும் இழந்து, தனியனாக நின்ற போது 'இன்று போய் நாளை