பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்வாழ்க்கை

13


8.ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

தவம் செய்பவர்களைத் தவ ஒழுக்கத்தில் நிலைத்திருக்கச் செய்பவன் இல்வாழ்க்கை நடத்துபவனே ஆவன். அவன் அங்ஙனம் செய்தலோடு அவ்வில்வாழ்க்கைக்குக்குரிய நெறியிலிருந்து தவறாமலும் இருப்பானாயின் அவனது இல்வாழ்க்கை தவம் செய்பவர்களுடைய நிலையைக் காட்டிலும் மிக்க பொறுமையை உடையதாகும்.

ஆறு-தவ ஒழுக்கம்; ஒழுக்கி-நடத்தி, அறன்-இல்லற நெறி; இழுக்காத-தவறாத ;நோற்பார்-தவம் செய்வோர்; நோன்மை-பொறுமை; வலிமை என்றும் கூறுவர். 48.

9.அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

இல்லறம், துறவறம் ஆகிய இரண்டனுள் அறன் எனச் சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையேயாகும். துறவறமும் பிறனால் பழிக்கப்படாத பெருமையுடையதானால் இல்வாழ்க்கையைப் போலவே சிறப்புடையதாகும்.

'அஃதும்'- என்னும் சொல் துறவறத்தைக் குறிக்கும். இச்சொல் இல்வாழ்க்கையையே குறிக்கும் என்றும் கூறுவர். 49

10.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இந்நிலவுலகத்தில், இல்வாழ்க்கையில் இருந்து வாழ வேண்டிய முறைப்படி ஒருவன் வாழ்வானாயின் அவன் மனிதனே யானாலும், வானுலகத்தில் வாழ்கின்ற தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான். 50

6. வாழ்க்கைத் துணைநலம்


1.மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

ஒரு நல்ல மனைவி இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகளையும், தன் கணவனது வரு