பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

திருக்குறள்



உள்ளத்தால் கலந்து பழகாதவரை அவர் தம் சொல்லைக் கொண்டு ஒரு சிறிதும் நம்புதற்கு இல்லை.

தேறற்பாற்று அன்று-நம்புவதற்கு இல்லை. 825

6.நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

நண்பர் போல் நன்மையானவைகளைச் சொல்லினும் பகைவர் தம் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும். 826

7.சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

வில்லினது வணக்கம் தீமை செய்தலைக் குறித்தமையால் பகைவர் தம் வணக்கத்தோடு கூடிய சொல்லினை நன்மையாகக் கொள்ளுதல் கூடாது.

சொல் வணக்கம்-வணக்கத்தோடு கூடிய இனிய சொற்கள்; ஒன்னார்கண்-பகைவரிடம்; வில்வணக்கம். வணங்குதல் போன்று தோன்றும் வில்லினது வளைவு.

வில்லினது வணக்கம் தீங்கையே குறிக்கிறது போலப் பகைவருடைய சொல்லில் காணப்படும் வணக்கமும் (பணிவும்) தீங்கையே விளைவிக்கும். ஆதலால், அப்பணிவு மொழியில் மயங்கக் கூடாது என்பதாம். 827

8.தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

தம்மை வணங்குவது போன்று காட்டிக் கொள்ளும் பகைவரின் கைகளின் உள்ளேயும் உயிரைப் போக்குதற்கு உரிய கொடிய கொலைக் கருவி மறைந்திருத்தல் கூடும்; அந்தப் பகைவர் அழுவது போன்று விடும் கண்ணிரும் அத்தன்மை வாய்ந்ததே ஆகும். 828

9.மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

பகைமை தோன்றாதபடி வெளியே மிகுதியாக நட்புத் தோன்றும் படி செய்தே உள்ளத்தே தம்மை இகழும்