பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இகல்

229



இகல்-பிறரோடு மாறுபடுதல்; பகல் பகுத்தல், வேறுபடுத்துதல்; பண்பின்மை-நற்குணம் இன்மை; அஃதாவது தீய குணம்; பாரித்தல்-வளர்த்தல், பரப்புதல். 851

2.பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

தம்மோடு கூடியில்லாமையை எண்ணி ஒருவன் அன்பில்லாத செயல்களைச் செய்வானாயினும் தாம் அவனோடு மாறுபடுதலைக் குறித்து அவனுக்குத் துன்பம் செய்யாது இருத்தலே சிறந்ததாகும்.

பகல்-வேறுபட்டிருத்தல், ஒன்று கூடாதிருத்தல்; பற்றா-பற்று இல்லாத செயல்கள், அன்பில்லாத சொற்கள்; இகல்-மாறுபாடு; இன்னா-துன்பம் தருவன. 852

3.இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவம்இல்லாத்
தாவில் விளக்கம் தரும்.

ஒருவன், இகல் என்று சொல்லப்படும் துன்பந்தரும் நோயினை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாததும் நிலையானதுமான புகழைத் தரும். 853

4.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகவும் கொடிய துன்பம் இகல் என்னும் மாறுபாடே ஆகும். அந்த இகல் என்னும் துன்பம் ஒருவனுக்கு இல்லையானால், அஃது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் மிகுந்த இன்பத்தினைத் தரும்.

இன்பத்துள் இன்பம் என்பதற்குப் பேரின்பம், அஃதாவது மோட்சம் என்றும் பொருள் கொள்ளுவர். 854

5.இகலெதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்?

இகல் என்னும் மாறுபாடு நேர்ந்தவிடத்து அந்த மாறுபாட்டை மேற்கொள்ளாமல் விலகி நடக்க வல்லவரை வெல்லக் கருதும் தன்மையுடையவர் எவர்? எவரும் இலர்.

சாய்ந்து ஒழுகல்-விலகி நடத்தல்; மிகல் ஊக்குதல்-வெல்லக் கருதுதல். 855