பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

திருக்குறள்



6.இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

பிறன் தன்னோடு மாறுபடும் போது அவனை எதிர்த்து நிற்றலே இனியது என்று ஒருவன் எண்ணுவானானால், அவன் வாழ்க்கையானது விரைவில் அழிந்து போவதோடு அவனும் அழிந்து போவான்.

மிகல்-எதிர்த்தல்; தவல்-அழிதல்: நணித்து-மிகவும் அருகில் உள்ளது; விரைவில் நிகழக் கூடியது. தவல் என்பது பொருள் அழிவையும், கெடல் என்பது சாதலையும், குறிக்கும். 856

7.மிகன்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

இகல் என்னும் மாறுபாட்டினை விரும்பும் தீய அறிவினை உடையவர்கள் வெற்றியடைவதற்குக் காரணமான உண்மைப் பொருளைக் காண மாட்டார்கள்.

மிகல்-வெற்றி; மேவல்-அடைதல்; மெய்ப் பொருள் உண்மைப் பொருள்; மேவல்-விரும்புதல்: இன்னா அறிவு-தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. 857

8.இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.

இகலுக்கு விலகிச் சொல்லுதல் ஒருவனுக்கு ஆக்கம் தரும்; அவ்விதம் விலகிச் செல்லாமல் அதனை எதிர்ப்பதில் ஊக்கம் கொள்வானாயின் அஃது அவனுக்குக் கேட்டினை விளைவிக்கும்.

மாறுபாட்டை எதிர்த்துச் செல்லாது, விலகிப் போதல் ஒருவனுக்கு ஆக்கம் தருவதாகும். அவ்விதம் விலகிப் போதலிலும் ஒர் அளவு வேண்டும். விலகிப் போகும் செயலை ஒருவன் மேலும் அதிகமாகத் செய்வானானால், அவனுக்கு: இது கேட்டினையும் ஊக்குவிக்கும் என்றும் இதற்குப் பொருள் கூறுவர்.

ஆக்கம்-செல்வம்: மிகல் ஊக்கம்-இகலை எதிர்த்துச் செல்லுதலை ஊக்குவித்தல்; ஊக்குதல்-தூண்டுதல் விளைவித்தல். 858

9.இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.