பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

திருக்குறள்



தழுவ எண்ணும் பொருட் பெண்டிர் தோளைப் பொருந்த எண்ணுவர்.

நிறை நெஞ்சம்-உறுதிப்பாடுள்ள மனம்; தோய்வர்-தழுவுவர்; நெஞ்சில் பிற பேணுதல்-அன்பு நீங்கலாகப் பிறவாகிய பணம், ஆடை, ஆபரணம் முதலியவற்றை நெஞ்சில் நினைத்துப் போற்றுதல். 917

8.ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

வஞ்சித்தலில் வல்ல பொதுமகளிரின் சேர்க்கை ஆராய்ந்து பார்க்கும் அறிவில்லார்க்கு 'மோகினி மயக்கு' என்று கூறுவர்.

ஆய்தல்-ஆராய்ந்து பார்த்தல்; அணங்கு-மோகினி மயக்கு, வருத்தம் என்றும் கூறலாம். 918

9.வரைவிலா மாணிழையார் மென்தோள் புரைஇலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

பிறரைத் தழுவுதலில் ஒரு வரையறை கொள்ளாத பொது மகளிர் மெல்லிய தோள்கள் உயர்வு இல்லாத கீழ் மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகம் ஆகும்.

மாண் இழையார்-மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்துள்ள பொது மகளிரைக் குறிக்கும்; புரை-உயர்வு; பூரியர்-கீழ்மக்கள்; அளறு-நாகம். 919

10.இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

இருவகைப்பட்ட மனத்தினையுடைய பொது மகளிரும், கள்ளும், சூதும் ஆகிய இம்மூன்றும் திருமகளால் ஒதுக்கப் பட்டார்க்கு நட்பாகும்.

இருமனம்-இருவகைப்பட்ட மனம், அஃதாவது ஒருவர் மீது அன்பு உள்ளவர் போல் நடித்து, அதே சமயத்தில் அவர் மீது அன்பில்லாமல் இருக்கும் மனம்; கவறு-சூது, சூதாடு கருவி; திரு-இலக்குமி; தொடர்பு-பற்று, நட்பு. 920