260
திருக்குறள்
8.நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
ஒருவனுக்கு நல்ல குணத்தில் அன்பின்மை தோன்றினால், அவன் குடிப் பிறப்பின் கண் ஐயங் கொள்ள நேரும்.
நார்-அன்பு; ஐயப்படல்-சந்தேகப்படுதல். 958
9.நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
நிலத்தின் இயல்பை அந்த நிலத்தில் முளைத்த முளை தெரிவிக்கும்; அது போல ஒருவன் பிறந்த குலத்தின் தன்மையை அவன் வாய்ச் சொல் அறிவிக்கும்.
கால்-முளை; காட்டும்-அறிவிக்கும். 959
10.நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டும் யார்க்கும் பணிவு.
ஒருவன் தனக்கு நலம் வேண்டும் என்று விரும்புவானானால், அவன் நாணம் என்னும் பண்பினை விரும்புதல் வேண்டும். அவ்விதமே, குடியின் உயர்வை அவன் விரும்புவானானால், அவன் எல்லாரிடத்தும் பணிந்து நடத்தலை விரும்புவானாக.
நாணுடைமை-தகாதவற்றைச் செய்ய அஞ்சும் தன்மை. 960
97. மானம்
1.இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
இன்றியமையாத சிறந்த செயல்களே ஆயினும், அவற்றால் ஒருவன் குடிப்பிறப்புத் தாழ நேரின், அந்தச் செயல்களை அவன் ஒழித்தல் வேண்டும்.
இன்றி அமையாச் சிறப்பின பசுவுக்கு நீர் வேண்டுதல் பெற்ற் தாயின் பொருட்டு இழி செயல் புரிதல் போல்வன; குன்ற் வருப-தன் நிலை அல்லது தன் குடும்ப நிலை தாழ்வாகக் கருதப்படத் தக்க செயல்கள்.