பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மானம்

263



ஒட்டார்-சேர்த்துக் கொள்ளாதவர், அவமதிப்பவர்l அந்நிலையிலேயே-தான் இருந்த துன்ப நிலையிலேயே; ;கெட்டான் அழிந்தான், இறந்தொழிந்தான். 967

8.மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கைப் பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

ஒருவனுக்குள்ள பெருந்தன்மையானது தன் வலிவை இழக்கக் கூடிய நிலை நேர்ந்த போது அவன் தன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை இறவாமைக்கு மருந்தாகுமோ? ஆகாது.

மருந்து-இறவாமல் இருக்கச் செய்யும் தேவாமிர்தம்; ஊன்-தசை, இங்கே உடம்பினைக் குறிக்கும்; ஒப்புதல்- பாதுகாத்தல்; பீடு-பெருமை அல்லது வலிமை; பெருந்தகைமை-பெரிய தகைமை, பெருமதிப்பு. 968

9.மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

தன் உடம்பிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமான் போன்ற இயல்புடையவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

கவரிமான்-ஒருவகை மான்; அன்னார்-போன்றவர்; உயிர் நீப்பர்-உயிரை விட்டு விடுவர்; மானம் வரின்-மானம் கெடவரின். 969

10.இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

தமக்கு இழிவு நேர்ந்த விடத்து உயிர் வாழாத மனமுடையவரின் புகழை உலகத்தார் வணங்கிப் போற்றுவர்.

இளி-இழிவு, மானக்கேடு; ஒளி பெருமை, புகழ்; தொழுது ஏத்தும்-வணங்கிப் போற்றுவர். 970