பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

திருக்குறள்


4.நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறருக்குப் பயன்படும்படி வாழ்பவர் தம் பண்பை உலகத்தார் கொண்டாடுவர்.

நயன்-நீதி; நன்றி-நன்மை; புரிதல்-விரும்புதல்; பயனுடையர்- பயன்படும்படி வாழ்பவர்; உலகு-உலகில் உள்ள பெரியோர் அல்லது உலகத்தவர். 994

5.நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

ஒருவரை இகழ்ந்து பேசுதல் விளையாட்டில் கூட நல்லது அன்று. எனவே உலக இயல்பை அறிந்து நடப்பவரிடம் பகைவர் மாட்டும் நல்ல பண்புகளே உள்ளனவாகும்.

பண்புடையார், தம் பகைவரிடமும் துன்பம் நேரும் வகையில் நடந்து கொள்ள மாட்டார் என்பது கருத்து.

நகை-விளையாட்டாகப் பேசுதல், சிரிக்க வைப்பதற்காகப் பேசுதல்: இன்னாது-நல்லது அன்று. துன்பம் தருவது; பாடறிவார்-உலக இயல்பை அறிந்து நடப்பவர்; பாடு-உலக ஒழுக்கம்.

உதாரணம்: 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' (கலித்தொகை) 995

6.பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.

பண்புடையவர்கள் தோன்றி வாழ்வதனாலேயே, இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தோன்றாதொழியின் இவ்வுலகம் மண்ணில் புகுந்து அழிவது உறுதியாகும்.

பண்பு-நல்ல குணம்; பறிதல்-தோன்றுதல்; மண்புக்கு-மண்ணில் புகுந்து; மாய்தல்-அழிதல்; உலகம் என்பது இங்கு உலகியலைக் குறிக்கிறது. 996

7.அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்.

ஒருவர், அரம் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் அவரிடம் மக்கட்பண்பு என்னும் நல்ல குணம்