286
திருக்குறள்
இல் பிறந்தார்-நற்குடியில் பிறந்தவர்; கண்-இடத்தில் என்பதைக் குறிக்கம் ஏழாம் வேற்றுமை உருபு; இன்மை-வறுமை; இளி-இழிவு; சோர்வு-மறதி.
1044
5.நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
வறுமை என்னும் துன்பநிலை ஒன்றின் காரணமாகப் பலவகைப் பட்ட துன்பங்கள் வந்து விளையும்.
இடும்பை-துன்பம்; பல்குரை-பலப்பல; 'குரை' என்பதற்கு இங்கே பொருள் இல்லை. இச்சொல் அசை நிலையாக வந்துள்ளது; சென்று படும்-வந்து விளையும். 1045
6.நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
நல்ல நூல்களில் உள்ள பொருளினை நன்றாக ஆராய்ந்து அறிந்து தெளிவாகச் சொன்ன போதிலும், வறியவர் சொல்லிய நற்பொருள் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகும்.
நற்பொருள்-நல்ல நூற்பொருள், மெய்ந்நூற்பொருள்; நன்கு உணர்தல்-ஆராய்ந்து அறிதல்; சொற்பொருள்-சொல்லிய பொருள்; சோர்வு படும்-ஏற்றுக் கொள்ளப்படாமல் போகும், பயன்படாமல் போகும். 1046
7.அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
அறஞ் செய்தற்குப் பொருந்தாத வறுமை ஒருவனை அடையுமானால், பெற்றெடுத்த தாயாராலும் அவன் அயலான் போல எண்ணப்படுவான்.
அறம் சாரா-அறஞ் செய்தற்குப் பொருந்தாத; ஈன்ற தாய்-பெற்றெடுத்த தாயார்; பிறன் போல நோக்குதல்-அயலானைப் போல எண்ணுதல். 1047
8.இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
நேற்றும் என்னைக் கொலை செய்வது போல் வந்து துன்புறத்திய வறுமையானது, இன்றைக்கும் என்னிடம் வந்து சேருமோ?(வந்தால் இனி யாது செய்வேன்.)