பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

திருக்குறள்



5.தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல்.

முயற்சியால் கிடைத்தது, தெளிந்த நீர் போன்று சமைத்த கூழே ஆனாலும், அதை உண்பதை விட இனிமையானது வேறு இல்லை.

தெண்ணீர்-தெள்+நீர், தெளிந்த நீர்; அடுபுற்கை-சமைத்த கூழ்; அடுதல்-சமைத்தல்; புற்கை-கூழ் அல்லது உணவு; தாள்-முயற்;; ஊங்கு-மேம்பட்டது.

முயன்று பெற்றது எளிய உணவே ஆயினும், அஃது அமிழ்தினும் சிறந்தது என்பது கருத்து. 1065

6.ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.

பசுவிற்குத் தண்ணீர் வேண்டுமென்று அயலாரிடம் சென்று இரப்பதாக இருந்தாலும், அந்த இரத்தலைப் போல நாவினுக்கு இழிவைத் தருவது வேறொன்றுமில்லை.

ஆ-பசு; இரவின்-இரத்தலைப் போல; இளிவந்தது-இழிவைத் தருவது.

குறிப்பு: அறச்செயல் குறித்தும் பிறரிடம் சென்று இரத்தல் கூடாது என்பது கருத்து. 1066

7.இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

பிறரிடம் சென்று இரப்பாரை யெல்லாம், “நீங்கள் பிறரிட்ம் இரக்கச் செல்லுவதாய் இருந்தால், தம்மிடம் உள்ளதைக் கொடாமல் ஒளிப்பவரிடம் இரக்கச் செல்லாதீர்கள்' என்று யான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்ளுவேன்.

இரப்பன்-வேண்டிக் கேட்டுக் கொள்வேன்; இரவன்மின்-பிச்சை எடுக்காதீர்கள். 1067

8.இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.